பாகிஸ்தானில் வரும் 8 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனிடையே அரசின் இரகசியங்களை கசியவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப்(பி.டி.ஐ.) கட்சியின் துணை தலைவரும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரேஷிக்கும் இதே வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தலில் போட்டியிட ஷா மஹ்மூத் குரேஷிக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஷா மஹ்மூத் குரேஷி மீதான வழக்கில் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஷா மஹ்மூத் குரேஷி போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.