Date:

நுவரெலியாவில் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம் !

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திரதினத்தையொட்டி நுவரெலியா விக்டோரியா பூங்கா முன்றலில் உட்புற வளாகத்தில் மரநடுகை நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன் முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு, உத்தியோகத்தர்களினால் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபொட அவர்கள் கலந்து கொண்டு மரநடுகை வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து
மேலதிக அரசாங்க அதிபர் நுவரெலியா மாநகர சபை விசேட ஆணையாளர் திருமதி சுஜீவ போதிமான, நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாநகர சபை உறுப்பினர்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சுதந்திர தினம் நினைவாக மரக்கன்றுகளை நடுகை செய்திருந்தார்கள்.

நானுஓயா நிருபர்

 

 

NewsTamil Ad
NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...

சி.ஐ.டிக்கு சென்ற தயாசிறி ஜயசேகர

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத்...

ஸ்பா – மூன்று பொலிஸார் இடைநீக்கம்

மாத்தறையின் வல்கம பகுதியில் உள்ள ஒரு பிரபலமான மசாஜ் நிலையத்திற்கு (ஸ்பா)...

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...