Date:

சம்மாந்துறையில் சோகம் : வாகன விபத்தில் சிக்கி 12 வயது மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு !

சம்மாந்துறையில் இன்று (03)  இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய மாணவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்னால் உள்ள வீதியை கடந்து,  அருகிலுள்ள  தமது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த குறித்த மாணவனை சம்மாந்துறை பகுதியில் இருந்து  அம்பாறையை நோக்கி   வந்த  கென்டர் ரக வாகனம் மோதியதில் மாணவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தில் சம்மாந்துறையைச் சேர்ந்த 12 வயதுடைய மாணவனே பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துடன் தொடர்புடைய கென்டர் ரக வாகனத்தை  செலுத்தி வந்த  சாரதி  கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்துக்குள்ளான வாகனம் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த மாணவனின் உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...