Date:

டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை இந்தியா – சீனாவுக்கு வழங்க தீர்மானம் !

டெலிகொம் நிறுவனத்தின் 53.23 சதவீத பங்குகளை போட்டித்தன்மையான இந்தியாவின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம், சீனாவின் கொட்யுன் இன்டர்நெஷனல் இன்வெஷ்ட்மன்ட் ஹோல்டிங் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார ஸ்தீரப்படுத்தல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

டெலிகொம் நிறுவனத்தின் அரசுக்கு சொந்தமான பங்குகளில் 50.23 சதவீதமான பங்குகளை விற்பனை செய்யும் இறுதி தீர்மானத்தில் சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அமைச்சு மட்டத்தில் துறைசார் குழுக்கள் நியமிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை பெற்றுக்கொள்வதற்கு இந்தியாவின் ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம், சீனாவின் கொட்யுன் இன்டர்நெஷனல் இன்வெஷ்ட்மன்ட் ஹோல்டிங் நிறுவனம், ஐக்கிய இராச்சியத்தின் லய்கா கூட்டிணைவுக்கு சொந்தமான பெட்டிகோ கொமர்ஷியோ இன்டர்னெஷனல் நிறுவனம் என்பன முன்னிலையாகியிருந்தன.

இதற்கமைய நிதி அமைச்சின் செயற்திட்ட விசேட குழு மற்றும் அமைச்சரவை நியமித்த விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை பெற்றுக்கொள்வற்கு பூரண தகுதி உள்ள போட்டித்தன்மையான நிறுவனங்களாக ஜியோ பிளாட்போர்ம் நிறுவம் மற்றும் சீனாவின் கொட்யூன் ஹோல்டிங் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

ஜியோ பிளாட்போர்ம் நிறுவனம் இந்தியாவின் கோடிஸ்வர வர்த்தகரும்,முதனிலை தொழிலதிபருமான முகேஸ் அம்பானிக்கு சொந்தமானது. போஃபஸ் வர்த்தக வலைத்தளத்தின் தரப்படுத்தலுக்கு அமைய உலகில் செல்வந்தர்களின் பட்டியலில் முகேஸ் அம்பானி 11 ஆவது இடத்தில் உள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தமிழ் பெண் பிரதிநிதியை தெரிவு செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்..!

திருகோணமலை மாநகர சபையில் தமக்குக் கிடைத்த போனஸ் பிரதிநிதிகளில் ஒருவராக கிளரன்ஸ்...

இலங்கையில் பெயர் மாற்றப்பட்ட உப்பு

ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு ஆனையிறவு உப்பு என மீண்டும்...

மற்றும் ஒரு ஏயார் இந்தியா விமானம் ஒன்றுக்கு நடந்த கதி!

தாய்லாந்தின் ஃபூகெட்டில் இருந்து இந்தியாவின் தலைநகர் புதுடெல்லிக்கு வெள்ளிக்கிழமை (13) சென்ற...

இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் வெளியிட்ட விசேட அறிக்கை

இன்று (13) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களைத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373