Date:

சபாரி ஜீப் கட்டணம் அதிகரிப்பு !

 

யால மற்றும் புன்தல வனப் பூங்காக்களில் சுற்றுலா சேவை ஜீப் கட்டணம்
2000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வரும் என யால சபாரி ஜீப் சங்கத்தின் தலைவர் அஜித் பிரியந்த நேற்று (29) தெரிவித்தார்.

அதன்படி, டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் மிட்சுபிஷி கார்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 13,000 முதல் 15,000 ரூபா வரையும் ஒரு நாளைக்கு 28,000 முதல் 30,000 ரூபாய் வரை பயணக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரா மேக்சி மற்றும் டாடா வாகனங்களில் 4 மணி நேர பயணத்திற்கான கட்டணம் 11,000ல் இருந்து 13,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு நாள் பயணத்திற்கான கட்டணம் 26,000 ரூபாயில் இருந்து 28,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

யால சபாரி ஜீப் சங்கத்தில் சுமார் 475 ஜீப்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் மற்றும் உதிரிபாகங்களின் விலை அதிகரிப்பால் ஜீப் உரிமையாளர்கள் வியாபாரத்தை விட்டு வெளியேறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எப்போது தேர்தல் என்று இப்போது கூற முடியாது! அமைச்சர் அறிவிப்பு

மாகாணசபைத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாகக் கூற முடியாது, தேர்தல்...

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...