Date:

மின்சார கட்டண திருத்தம் : பொதுமக்கள் கருத்துக்கணிப்பு அடுத்த வாரம் !

மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை அடுத்த வாரமளவில் பெற்றுக்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

மின்சார கட்டண திருத்த யோசனை ஏற்கனவே இலங்கை மின்சார சபையினால் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விதிகளுக்கு உட்பட்டு மின் கட்டண திருத்தம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பினால் மின்சார சபைக்கு ஓரளவு இலாபம் கிடைத்துள்ளதால் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்தை 100 வீதமாக அதிகரிப்பதை நீக்குமாறு எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது.

அதிக மழையினால் இலங்கை மின்சார சபை அதிக இலாபம் ஈட்டி வருவதாகக் குறிப்பிடும் குழு, அந்த இலாபத்தின் பலனை மின்சார பாவனையாளர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தை அரசு கணிசமாக குறைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ,...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...