Date:

பிரித்தானிய இளவரசி ஆன் ஜனாதிபதியுடன் சந்திப்பு !

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆனி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அன்புடன் வரவேற்றார்.

அதன் பின்னர் இளவரசி ஆனி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் இளவரசி ஆனியும் பதிவைச் செய்துள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாவின்னவில் பேருந்து விபத்து

மஹரகம, நாவின்ன பகுதியில் இன்று (14) காலை 6 மணியளவில் இடம்பெற்ற...

அநுரவைக் கண்காணிக்க ’அநுர மீட்டர்’ அறிமுகம்

வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்...

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்

நேற்றைய தினம்(12) யாழ் போதனா வைத்தியசாலைக்கு கௌரவ சுகாதார அமைச்சர் Dr....

சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்

மடகாஸ்கரில்  சிறுமி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...