Date:

பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான சமிந்த தாப்ரு எனப்படும் பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் பொப்மாலியும் அவரது மனைவியும் அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர்களும் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

விசாரணைகள் நிறைவடையாததால் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு பொலிசார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான் எதிர்வரும் 15ம் திகதி வரை சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துவந்த சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...