Date:

பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பிரபல போதைப்பொருள் கடத்தல் காரரான சமிந்த தாப்ரு எனப்படும் பொப்மாலி உள்ளிட்ட மூவரை தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் பொலிசாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் பொப்மாலியும் அவரது மனைவியும் அவர்கள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர்களும் இன்றைய தினம் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டனர்.

விசாரணைகள் நிறைவடையாததால் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு பொலிசார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட மேலதிக நீதவான் எதிர்வரும் 15ம் திகதி வரை சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

300 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துவந்த சம்பவம் தொடர்பிலேயே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இறக்குமதி தடையை நீக்கி வர்த்தமானி வெளியீடு

பல பொருட்களின் இறக்குமதித் தடையை நீக்கி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வர்த்தமானி...

மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் வெளிநாட்டு...

அனுரவுக்கு தடையுத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட...

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்

எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர்...