கொழும்பு – அவிசாவளை லோ லெவல் வீதியின் (Low Level Road) வெல்லம்பிட்டிய சந்தி முதல் கொட்டிகாவத்தை வரையான பகுதி இன்று இரவு 10 மணி முதல் நாளை (07) மாலை 05 மணி வரை மூடப்படவுள்ளது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அவசர நிர்மாணப் பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கொட்டிகாவத்தை சந்தியில் இடப்பக்கம் திரும்பி, கொத்தடுவ, கொலன்னாவை ஊடாக பேஸ்லைன் வீதிக்கு அல்லது கொலன்னாவை சந்தியில் மீண்டும் அவிசாவளைக்கு பிரவேசிக்க முடியும்.
கொழும்பிலிருந்து அவிசாவளைக்கு செல்லும் வாகனங்கள் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வலப்பக்கமாக திரும்பி கொலன்னாவை ஊடாக, கொத்தடுவ நகரில் இடப்பக்கமாக கொட்டிகாவ சந்தியில் இருந்து மீண்டும் அவிசாவளைக்கு செல்ல முடியுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.