கொஸ்கம ஹிங்குரல தெஹிகஹலந்த போதிராஜாராம விகாரையை சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் கடத்தப்பட்டுள்ளமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (03) 11.30 மணியளவில் விகாரைக்கு வந்த சிலர் பௌத்த பிக்குவை கடத்திச் சென்றதை விகாரையின் பணிபுரியும் ஒருவர் பார்த்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.