Date:

யாழில் களஞ்சியசாலையொன்றில் திடீர் தீ விபத்து : இருவர் பலி !

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.

குறித்த சம்பவம் இன்று(02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இருவரும் களஞ்சியசாலையில் சென்று கதவை பூட்டி விட்டு நித்திரைக்கு சென்றபோதே அதிகாலை 12.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைக்க முற்பட்டபோதும்,

களஞ்சியசாலையில் உறக்கத்தில் இருந்த இருவரும் உடல் கருகி பலியானதுடன், அங்கிருந்த பொருட்களும் தீயில் எரிந்ததால் அருகில் இருந்த வாகன தரிப்பிடத்திலும் தீப்பரவி சேதமடைந்தது.

மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான வேலாயுதம் புவனேஸ்வரம் என்ற 46 வயதானவரும் வேலாயுதம் ரவி என்கிற 38 வயதானவருமே உயிரிழந்துள்ளனர்.

களஞ்சியசாலையில் இருந்த சிலிண்டர் தீ விபத்துக்கு காரணமாக இருக்குமா என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிஷாந்தன், தடயவியல் பொலிஸார், பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹர பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கண்காணிப்பு விஜயம் (clicks))

முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...

கொழும்பு மேயரின் நடனம்,சமூக ஊடகங்களில் வைரல்

ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே...

SJB இல் தற்போது தலையாட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர் -பொன்சேகா

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01...

இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த ஈரானிய ஜனாதிபதி

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars...