Date:

வெலிகமவில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி !

மாத்தறை – வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் சார்ஜன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெலிகம பகுதியில் நடாத்தப்பட்ட சுற்றி வளைப்பின் போது, குழுவொன்றினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகமொன்றை மேற்கொண்டு வேனொன்றில் தப்பிக்க முயற்சித்த தருணத்தில் பொலிஸார் பதில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது பரஸ்பர துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட நிலையிலேயே, பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...