Date:

போலி மின்சார சபை ஊழியர்களால் பதற்றம் : ஏமாற்றப்படும் மக்கள் !

முல்லைத்தீவு – உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த கிராமத்திற்கு கடந்த 27ஆம் திகதி சென்ற இருவர் மின்சார கட்டணம் செலுத்தாத மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண்கள் மின்சாரத்தினை துண்டிக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.

இல்லாவிடின் கட்டும் பணத்தில் ஒருதொகுதியினை தாருங்கள் நாங்கள் செல்கின்றோம் என கேட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் பல குடும்பங்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணத்தினை கொடுத்துள்ளார்கள்

இதையடுத்து, 28ஆம் திகதி மின்சார பட்டியல் கொடுக்கும் நபர் வீடுகளுக்கு வந்து மின்சார பட்டியலை கொடுத்துள்ளார்.

இதன் போது சம்பவத்தினை மக்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்த மக்கள் முல்லைத்தீவில் உள்ள மின்சார சபையிடம் முறையிட்டுள்ளார்கள்.

அவர்கள் ஒன்றும் செய்யமுடியாது என்று தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெயர் விபரங்கள், மின்கட்டண விபரங்கள் எல்லாம் எவ்வாறு அவர்களுக்கு தெரியும் என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள்.

மின்சார சபை நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்கள்.

தூண்டாய் கிராமத்தில் சுமார் பத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...