Date:

ஒரு பெண்ணுக்காக நடந்த கலவரம்!

மில்லனியவின், பெல்லந்துடாவ பகுதியில் யுவதி ஒருவர் தொடர்பில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மில்லனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மில்லனிய, பெல்லந்துடாவ, தம்மானந்த மாவத்தையில் கடை ஒன்றுக்கு முன்பாக வைத்து வாள்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் மூவர் பெல்லந்துடாவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றைய நபர் பொக்குனுவிட்ட பிரதேசத்தை சேர்ந்தவர்.

பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...