Date:

இலங்கையில் புதிய கொவிட் வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கொவிட்-19 வைரஸின் வேகமாகப் பரவும் மாறுபாடான JN.1 வைரஸால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நோயாளியும் நாட்டில் பதிவாகவில்லை என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய மாறுபாடு இந்தியாவின் கேரளாவில் பதிவாகியதையடுத்து, இலங்கையில் சுகாதார அதிகாரிகள் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஓமிக்ரோன் JN.1 கொவிட் வைரஸின் புதிய துணை வகையாக அடையாளம் கண்டுள்ளது.

மேலும் இந்த வைரஸ் கேரளாவில் ஒரு பெண்ணிடம் முதலில் கண்டறியப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பரவும் எந்தவொரு புதிய நோயும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் அது தொடர்பில் எப்போதும் அவதானம் செலுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

JN.1 வைரஸ் திரிபு என்பது மற்ற அனைத்து துணை வகைகளிலிருந்தும் கணிசமாக வேறுபடும், வேகமாக பரவும் திரிபு என்று நிபுணர்கள் தெரிவவித்துள்ளனர்.

இந்த புதிய துணை வைரஸின் அறிகுறிகள் காய்ச்சல், மூக்கு வடிதல், தொண்டை புண், தலைவலி, இரைப்பை குடல் வலி போன்றவையாகும்.

இந்த வைரஸ் மாறுபாடு ஒகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

’முழு நாடும் ஒன்றாக’: 1,314 பேர்

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பில் 3 நாட்களில் 1,314...

பாதுகாப்பு கோருகிறார் அம்பிட்டியே தேரர்

தனது உயிருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, மட்டக்களப்பு மங்களராமயத்தின் விகாராதிபதி...

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு கோடிகளில் அடித்த அதிர்ஷ்டம்

உடப்புவில் ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா...

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் உறுப்புரிமையை இழந்தனர்

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் ஆதம்பாவா அஸ்பர் அகில இலங்கை மக்கள்...