Date:

சாய்ந்தமருது மதரஸாவில் உயிரிழந்த முஸ்லீம் மாணவன்…! மௌலவி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

அண்மையில் அம்பாறை சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் காத்தான்குடி பகுதியை சேர்ந்த மாணவன் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் முழு இலங்கையையும் பரபரப்படைய செய்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்  சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அந்தவகையில்,  மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து  புனித இஸ்லாம் மதத்தை தழுவி 3 பிள்ளைக்கு தாயான பெண் தனது பிள்ளைகளின் மத்ரஸா கட்டணத்தை செலுத்த முடியாமல் திணறுகின்றார்.

இந்நிலையில் மௌலவியை சந்தித்து அப்பெண் உதவி கோருகின்றார்.இந்நிலையில் மௌலவி அப்பெண்ணிற்கு குறித்த மத்ரஸாவில் மாணவர்களை கண்கானிப்பதற்கான பதவி ஒன்றிறை வழங்கியதாக தனது வாக்குமூலத்தில் அப்பெண் உறுதிப்படுத்துகின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நான் அன்றைய தினம் இரண்டரை மணிக்கு மத்ரசாவினுள் நுழைந்­த போது மரணித்த மாணவனை கண்டேன்.

சாப்பிட்டுவிட்டு  வந்து கொண்­டி­ருந்­­தார்

பின்னர் நான்க­ரை மணியளவில் மத்­­ர­சா­வி­லி­ருந்து வீட்­டுக்கு வந்து மீண்டும் 6.30 மணி­ய­ளவில் மத்ரசாவுக்கு சென்றேன்.

அப்போது இந்த சம்பவம் நடந்­து முடிந்திருக்க வேண்டும்.

நான் மேல் மாடிக்குச் சென்று எனது பேஸ் கவரை கழற்றி விட்டு ஒரு தூணில் சாய்ந்து கொண்டு நின்ற போது மேல் மாடியில் இருக்கின்ற பிள்ளைகள் மஹ்ரிப் தொழுவதை அவதானித்தேன்.

அந்த நேரம் கீழ் தளத்திலே இருந்த மாணவர்கள் தொழவில்லை. அப்போதுதான் மத்ரசா அதிபரான மௌலவி  ‘ஒரு ஆள அடித்து வளர்த்தாட்டி வச்சிருக்கன்’ என்றார். எனக்கு மட்டுமல்ல அவ்விடத்தில் நின்ற அனைவருக்கும் அவர் கூறிய இந்த வார்த்தை தெளி­வாக கேட்­ட­து.

அப்போது நான்  ‘யார வளத்தாட்டி வச்சிருக்கிறீங்க’ என கேட்டேன். அதற்கு அவர்  யாரை அடித்­துள்ளேன் என்று பெயர் குறிப்பிடவில்லை.

பின்னர் நான் ஓடி வந்து மதரசாவின் சி.சி.ரி.வி கமராவைப் பார்த்துக் கொண்டு நின்றேன்.

அந்த நேரம் ஒரு மாணவன் ஓடி வந்தான்.

அதன் பின்னர் இன்னும் சில மாணவர்கள் ஓடி வந்தார்கள்.

பிறகு ஏனைய மாணவர்கள் எல்லோரும் ஓடி வந்தார்கள்.

என்ன சுனாமியா வந்­து­விட்­டது? ஏன் மாணவர்கள் எல்லாம் ஓடுகிறார்கள் என்று எனக்­குள் நினைத்துக் கொண்­டேன்.

அதன் பிறகு மற்­றொரு மாண­வர் ஓடி வந்து சி.சி.ரி.வி கமராவின் சுவிட்சை ஓப் பண்ணினார்.

பின்னர் கமராவில் எதுவும் தெரியவில்லை.

அதற்கு பிறகு மௌலவி தொலைபேசியில் ஏதோ பேசினார்.

பின்னர் மூன்று பேர் வந்தார்கள். சி.சி.ரி.வி.கமராவின் வயர்களை கழற்றினார்கள்.

நான் அத்தோடு அங்கு ஓரி­டத்தில் அமர்ந்­துவிட்டேன்.

கேர்ட்டின் சீலையை இழுத்து மறைத்துவிட்டார்கள்.

பின்னர் பிள்­ளை­க­ளி­டம் பாடத்தை கேளுங்கள் என்று கூறிவிட்டு மௌலவி அங்­கி­ருந்து சென்றுவிட்­டார்.

ஏதோ ஒரு சம்பவம் நடந்துவிட்டது என்பதை நான் உணர்ந்தேன்.

பின்னர் மர­ணித்த மாணவன் யார் என்று விசாரித்தேன்.

கண் கலங்கி பீதியடைந்தேன். அதிர்ச்­சியில் உறைந்து போனேன்.

நான் பகல் தானே குறித்த மாணவனை கண்டேன் என்று கூறி அழுதேன்’’ என்­றார்.

இச் சம்­பவம் தற்­கொ­லைதான் என கதை பரப்பி குறித்த மெள­லவி தப்­பிக்க முனைந்த போதிலும் இதனைக் கொலை என நிரூ­பிப்­ப­தற்குத் தேவை­யான ஆதா­ரங்­களும் சாட்­சியங்­­களும் கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் பொலிசார் தெரி­விக்­கின்­ற­னர்.

முஸ்லிம் சமூ­கத்தை பேர­திர்ச்­சிக்­குள்­ளாக்­கிய இச் சம்­பவம் தொடர்­பில் சம்­பந்­தப்­பட்ட மெள­லவி கைது செய்­யப்பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் இச் சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை அம்­பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதி­பரின் வழி­காட்­டலில் சாய்ந்­த­ம­ரு­­து பொலி­சார் முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri...