Date:

இந்தோனேசியா சிறைச்சாலையில் தீ- 41 கைதிகள் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 41 சிறைக் கைதிகள் உயிரிழந்ததோடு, 39 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த தங்கெராங்க சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1,000 சிறைக் கைதிகள் மட்டுமே அடைக்கப் போதுமான சிறைச்சாலையில் சுமார் 2,000இற்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள.

சிறைச்சாலையில் தீ விபத்து இடம்பெற்ற கட்டிடத்தில், 122 சிறைக் கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். தீ விபத்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உடனடியாக அந்த கட்டடத்தில் இருந்த மற்ற கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அபராதத் தொகையை ஒன்லைனில் செலுத்த அனுமதி

போக்குவரத்து அபராதத்தை ஒன்லைனில் செலுத்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த அமைச்சரவை...

நிஷாந்தவுக்கு 8 ஆம் திகதி வரை விளக்கமறியல்

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் (CIABOC)...

முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது

மோட்டார் போக்குவரத்துத் துறையின் முன்னாள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த வீரசிங்க மற்றும்...

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

ஜூலை மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இடம்பெறாது...