அனைத்து வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து 176 விசேட வைத்திய ஆலோசகர்களால் எழுத்தாணை மனு ( ரிட்) தாக்கல் செய்யப்பட்டப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்கள் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் விக்கும் களுஆராச்சி ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, அனைத்து வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிக்ககும் உத்தரவை பிறப்பித்துள்ளது.