Date:

உலகின் மிகப்பெரிய பூசணிக்காய்

யார் பெரிய பூசணிக்காயை வளர்த்து காட்சிப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Half Moon Bay எனும் பகுதியில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் பல விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

உலகின் பூசணிக்காய்களில் தலைநகரம் என கூறப்படும் Half Moon Bay-இல் 50 ஆவது தடவையாக இம்முறை நடந்த போட்டியில், 1,247 கிலோகிராம் எடையுள்ள உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தை சேர்ந்த 43 வயதான தோட்டக்கலை வல்லுனரும், பயிற்சியாளருமான Travis Gienger என்பவர் போட்டிக்கு கொண்டு வந்திருந்த இந்த மிகப்பெரிய பூசணிக்காய் தான் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

அவர் வளர்த்த பூசணிக்காய் மிகப் பெரியது என போட்டியில் தெரிவு செய்யப்பட்டு, அவருக்கு 30,000 டொலர்கள் பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

டிராவிஸ் 30 வருடங்களுக்கும் மேலாக பூசணிக்காய் வளர்ப்பிலும் விவசாயத்திலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் வளர்த்த பூசணிக்காய், டிராவிஸ் வளர்த்ததை விட 113 கிலோகிராம்கள் எடை குறைவானது.

2020 ஆம் ஆண்டு முதல் டிராவிஸ் இந்த போட்டியில் தொடர்ச்சியாக பங்கேற்று வருவதுடன், இறுதியாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் அவர் பரிசு பெற்றுள்ளார்.

இத்தாலியை சேர்ந்த ஒருவரின் 1226 கிலோ எடை கொண்ட பூசணிக்காய் தான் உலகின் மிகப்பெரிய பூசணிக்காய் என்ற கின்னஸ் சாதனையை படைத்திருந்தது.

அந்த சாதனையை தற்போது டிராவிஸின் 1,247 கிலோகிராம் பூசணிக்காய் முறியடித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறி தலதா வழிபாடு’ – இன்று 2வது நாள்

சிறி தலதா வழிபாடு’ இரண்டாவது நாளாக இன்று (19) மதியம் ஆரம்பிக்கப்படவுள்ளது.   அதன்படி,...

மனம்பிடிய துப்பாக்கி சூடு – காரணம் வெளியானது

மனம்பிடிய ஆயுர்வேத பிரதேசத்தில் அமைந்துள்ள ‘ஜீவமான் கிறிஸ்து தேவாலயம்’ என்ற புனித...

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

அதிரடியாக பிள்ளையானின் சாரதியும் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373