Date:

300,000 க்கும் மேற்பட்ட வீரர்களை அணி திரட்டியுள்ள இஸ்ரேல்!

இஸ்ரேல் அரசாங்கம் 300,000 க்கும் மேற்பட்ட வீரர்களை அணிதிரட்டியுள்ளதோடு தென்மேற்கு எல்லையில் உள்ள காசா பகுதியை முழுமையாக மூடியுள்ளது.

இந்நிலையில் காசா மீது தரை வழியாக ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இஸ்ரேலியப் படைகள் வான் மற்றும் பீரங்கி மூலம் காசாவில் ஹமாஸ் அமைப்பின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இஸ்ரேல் மீதான தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடியாக கடந்த மூன்று நாட்களாக இடம்பெறும் தாக்குதல் நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,600ஐத் தாண்டியது.

700 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள அதேநேரம் 50 வெளிநாட்டவர்கள் உட்பட 900 பேர் இஸ்ரேலில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் 187,000 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலோர் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தாக்கப்பட்ட கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் வைத்தியசாலையில்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தைத்...

’’ஈரான் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார்’’-இஸ்ரேல்

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத்...

திடீரென நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி! எதிர்க்கட்சி அதிரடியாக வெளிநடப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.   நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி...

கற்பிட்டி பிரதேச சபை தலைவர் மீது தாக்குதல்

மதுரங்குளிய விருதோடை பகுதியில் கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் மற்றும் ஒரு...