Date:

பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

உப ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று(05) காலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு இவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று(05) பகல் 12 மணிக்கு முன்னதாக அனைத்து உப ரயில் கட்டுப்பாட்டாளர்களும் உடனடியாக தமக்குரிய பணியிடங்களுக்கு சமூகமளிக்க வேண்டுமென ரயில்வே பொது முகாமையாளரினால் முற்பகல் அறிவிக்கப்பட்டிருந்தது.

உரிய பணியிடங்களுக்கு சேவைக்கு சமூகமளிக்க முடியாதோர் அருகிலுள்ள ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டுமென ரயில்வே பொதுமுகாமையாளர் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவரால் உப ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் தாக்கப்பட்டமை காரணமாக ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களால் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக நேற்று(04) பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking கட்டார் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரேஷ்ட ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல்...

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...