Date:

நிபா வைரஸ் தொடர்பான விசேட அறிவிப்பு

முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இறக்குமதி மூலம் இலங்கைக்குள் நிபா வைரஸ் பரவும் அபாயம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நிபா வைரஸ் இலங்கைக்குள் பிரவேசிக்கும் அபாயம் மிகவும் குறைவு என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவும் அபாயம் கடந்த மூன்று வருடங்களில் பல தடவைகள் முன்னிலைப்படுத்தப்பட்ட போதிலும் அது இலங்கையில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என அவர் கூறுகிறார்.

நிபா வைரஸ் குறித்து மக்கள் தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம் என்றும் அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...