கம்புறுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சப்புகொட பகுதியில் நீரில் மூழ்கி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உல்வள, கம்புறுபிட்டிய பகுதியில் கல்விகற்கும் 13 வயதான மாணவி ஒருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மாணவி ஹொக்கி பயிற்சிகள் நிறைவடைந்த பின்னர் 9 மாணவர்களுடன் கிரம்பஓயாவிற்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போதே இந்த அனர்த்தத்தை அவர் எதிர்நோக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கம்புறுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW