Date:

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இம்மாதத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது.

அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, இந்த மாத காலப்பகுதியில் இதுவரை 2,003 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

முன்னைய மாதங்களை விட இந்த மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என சுகாதார திணைக்களம் முன்னர் எதிர்வு கூறியிருந்தது.

ஆனால் அந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 63,881 ஆக அதிகரித்துள்ளது.

டெங்கு அபாய வலயங்கள் 07 ஆக குறைக்கப்பட்டுள்ள போதிலும், தற்போதைய மழையினால் அது மேலும் அதிகரிக்கலாம் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

வைத்தியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு திருத்தங்கள் தொடர்பான சுற்றறிக்கை உடனடியாக வெளியிடப்படாவிட்டால்...

Breaking நாங்கள் இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கினோம் ,இனி பொருளாதார இலக்குகள் தாக்கப்படும்-ஈரான்

வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறுகையில், ஈரானின் தாக்குதல்கள் தொடரும்: முதல் இரவில்,...

“முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும்...

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373