Date:

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானம்

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி இன்னும் சற்று நேரத்தில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

நடப்பு செம்பியனான இலங்கை அணி 7-வது முறையாக ஆசிய கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்பில் உள்ளது.

இலங்கை அணி 1986, 1997, 2004, 2008, 2014, 2022-ம் ஆண்டுகளில் செம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

நடப்பு தொடரிலும் இலங்கை அணி சிறப்பாகவே ஆடி வருகிறது.

அதேநேரம் இந்திய அணி 1984, 1988, 1990-91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.

இலங்கை அணியில்

பெத்தும் நிஸ்ஸங்க

குசல் பெரேரா

குசல் மெண்டிஸ் †

சதீர சமரவிக்ரம

சரித் அசலங்கா

தனஞ்சய டி சில்வா

தசுன் ஷானக

துனித் வெல்லாலகே

துஷான் ஹேமந்த

பிரமோத் மதுஷன்

மதீஷ பத்திரன

இந்திய அணியில்

ரோஹித் சர்மா

சுப்மன் கில்

விராட் கோலி

கேஎல் ராகுல்

இஷான் கிஷன்

ஹர்திக் பாண்டியா

ரவீந்திர ஜடேஜா

வொஷிங்டன் சுந்தர்

ஜஸ்பிரித் பும்ரா

குல்தீப் யாதவ்

முகமது சிராஜ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

செம்மணி 3ஆம் கட்ட அகழாய்வு 2026 இல்

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே...

விரிவுரையாளரின் பாலியல் வன்கொடுமை: சுயாதீன விசாரணை

விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல்...

கைதான முன்னாள் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பிணை

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்கழுவினால் கைது செய்யப்பட்டிருந்த இரண்டு முன்னாள் சிரேஸ்ட...

கடல்சார் ஒத்துழைப்புக்கு சவூதியுடன் பேச்சு

கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை...