Date:

50 ஆண்டுகளில் இடம்பெற்ற பேரழிவுகளில் 2 மில்லியன் பேர் உயிரிழப்பு

கடந்த 50 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப சலனம் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக வானிலை அமைப்பு, இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட இறப்பு மற்றும் பொருளாதார இழப்புகள் பற்றிய மிக விரிவான ஆய்வை நடத்தியுள்ளது.

1979 முதல் 2019 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட 11,000 இயற்கை பேரிடர்களை ஆய்வு செய்தே குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இவற்றினால் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதோடு மொத்த இழப்புகளில் 3.64 டிரில்லியன் டொலர் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.

2 மில்லியன் இறப்புகளில் 91% க்கும் அதிகமானவை வளரும் நாடுகளில் நிகழ்ந்துள்ளன என்றும் உலக வானிலை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது

தென்னிந்தியா நடிகரும், தே.மு.தி.க முன்னாள் தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன்...

இலங்கையில் முதன்முறையாக காரசாரமான கொரியன் ராமேனை அறிமுகப்படுத்தும் Prima kottumee

இலங்கை முழுவதிலும் காரசார சுவையினை விரும்பும் அனைவரையும் உற்சாகப்படுத்த Prima kottumee ...

BREAKING லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ...

எரிபொருள் விலை அதிரடியாக குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை சிபேட்கோ...