தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு நாட்டிற்குள் நுழைவதை தவிர்க்க முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீ 12 என்ற குறித்த கொரோனா வைரஸ் திரிபு தென்னாப்பிரிக்காவில் பரவி வருகின்றது.
இதற்கு முன்னர் அங்கு பரவலடைந்த வைரஸ் திரிபும் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இது போன்று பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் திரிபுகளும் நாட்டில் அடையாளம் காணப்பட்டன.
எனவே அதனை தவிர்க்க முடியாது.
புதிய வைரஸ் திரிபுகளை உடனடியாக கண்டுப்பிடிக்க முடியுமாயின் அதனை தவிர்க்க முடியும்.
ஆனால் அதனை இனங்காண்பதில் தாமதமாவதாக விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.