Date:

ஆசிய கோப்பை கிரிக்கெட் இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

 

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

16 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறன.

6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன.

சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இன்றைய போட்டி கொழும்பு பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும்.

பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கண்டி, பல்லேகலயில் மோதிய லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த ஆட்டம் இரத்தானதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதனால் சூப்பர்4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான (ரிசர்வ் டே) அடுத்த நாளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ் தமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புலிகளின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தவே சுரேஸ் சலே கைது

விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி...

இலங்கை அணியின் வீழ்ச்சி குறித்து சங்கக்கார வேதனை!

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்கொண்டுள்ள பின்னடைவைக் கண்டு வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த...

அவசரகாலச் சட்ட விதிமுறைகளுக்கு எதிரான 2 மனுக்கள் தள்ளுபடி!

டித்வா புயலைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகாலச்...

மின்சார தொழிற்சங்கத்தினர் இன்று அடையாள பணிப் புறக்கணிப்பு

முன்வைக்கப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் வியாழக்கிழமை (26)...