Date:

நூறு அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி!

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி நூறு அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (09) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று வயது குழந்தை உட்பட நால்வர் படுகாயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் நீர்கொழும்பில் வசிப்பவர்கள் எனவும் உறவினரின் இறுதி சடங்கிற்காக மஸ்கெலிய சென்றிருந்தனர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா-நோர்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் ஹபுகஸ்தான பிரதேசத்தில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்தமையால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்றும் கன ம​ழைக்கு வாய்ப்பு

கிழக்குத் திசைக் காற்றழுத்தச் சுழற்சியின் காரணமாக, நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதால்,...

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்குக் கொடுப்பனவு நாளை முதல்

நிலவும் அனர்த்த நிலை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு...

அர்ஜூனவும் கைதாவார் என அறிவிப்பு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர்...

சிட்னி துப்பாக்கிச் சூடு: இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அங்கு வசிக்கும் இலங்கையர்கள்...