Date:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் குறித்து பரிந்துரைகளை வழங்க ஆலோசனைக் குழு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்வது அல்லது பிணை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வதற்காக ஆலோசகர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் 13 ஆம் சரத்திற்கு அமைய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் ஆலோசகர் குழு நியமிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் சட்டப்பிரிவு பணிப்பாளர் நாயகம், உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிஸ் குப்த ரோஹனதீர குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதம நீதியரசர் அஷோக டி சில்வாவின் தலைமையிலான இந்த குழுவில், ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி A.A.R.ஹெய்யன்துடுவ மற்றும் ஓய்வுபெற்ற சொலிசிட்டர் ஜெனரல் சுஹத கம்லத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை அனுபவிக்கும் அல்லது தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து, அவர்களுக்கு பிணை வழங்குதல் அல்லது அவர்களை விடுதலை செய்தல் உள்ளிட்ட தீர்மானங்களை மேற்கொண்டு ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்வதை இந்த ஆலோசகர் குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்படுவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.2 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலப்பரப்பில் இருந்து...

பிரபல நடிகை சேமினி கைது

நிதி மோசடி வழக்குகள் தொடர்பான ஏழு நிலுவையில் உள்ள பிடியாணைகள் தொடர்பாக,...

Update 2 :நுவரெலியாவில் கோர விபத்து ; உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

நுவரெலியா கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11)...

இலங்கை மின்சார சபையின் தலைவர் ராஜினாமா!

மின்சாரக் கட்டணக் கட்டணம் மற்றும் இதர விடயங்களில் வெளியாட்களின் தலையீடு காரணமாக,...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373