Date:

குரங்குகள் ஏற்றுமதியின் முக்கிய பின்னணி வௌியானது!

100,000 குரங்குகளில் முதல் தொகுதி குரங்குகள் சீனாவின் ஆய்வுகூடங்களுக்குச் செல்லலாம் என சுற்றுச் சூழல் நீதிமைய நிர்வாகப் பணிப்பாளர் ஹேமன்த விதானகே தெரிவித்துள்ளார்.

இந்தக் குரங்குகள் ஒப்பனைப் பொருட்களுக்கான பரிசோதனைகளுக்கும் மருத்துவப் பரிசோதனைகளுக்கும் பயன்படுத்தப்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சீனாவில் 18 மிருகக் காட்சி சாலைகள் மட்டுமே உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் சராசரியாக 5,000 குரங்குகள் இருக்கின்றன. எனவே இந்தக் குரங்குகள் சீனாவிலுள்ள மிருகக் காட்சிசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன எனும் கூற்று நம்பகத்தன்மையற்றதாகும்“.

“100,000 குரங்குகளை அரசாங்கம் சீனாவிற்கு அனுப்பினாலும் நாட்டில் குரங்குகளின் தொகை குறையாது. இந்தக் குரங்குகள் சீனாவிலுள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்படுவதாக இருந்தால் அவை இலங்கை மிருகக் காட்சிசாலைகளிலுள்ள விலங்குகளைப் போலவே பராமரிக்கப்பட வேண்டும்.

எமது மிருகக் காட்சி சாலைகளில் 100,000 டோக் இனக் குரங்குகள் இல்லை. எனவே இந்நிலைமையை நாட்டு சட்டத்தின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது“ என விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வாழ்வதற்கு எம்மைப் போலவே அந்தக் குரங்குகளுக்கும் உரிமையுள்ளது. எனவே குறித்த பிரதேசங்களிலிருந்து குரங்குகளை அகற்றி சீன ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி அவற்றை சித்திரவதை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு...

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...