யாழ்ப்பாணத்தில் டிக்டொக் (TikTok) சமூகவலைத்தளம் ஊடாக காதல் வயப்பட்டு சிறுமியொருவர் காதலனை சந்திப்பதற்கு திருமலைக்கு சென்றுள்ளார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி ரிக்ரொக் செயலி (TikTok) மூலம் மலர்ந்த காதல் காரணமாக காதலனைச் சந்திப்பதற்கு திருகோணமலைக்குச் சென்றுள்ளார்.
குறித்த காதலனை தேடி சென்ற சிறுமி அநாதரவாக விடப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.