Date:

காபுலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்

காபுலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் ஆப்கான் பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்தது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிலவும் குழப்பநிலைக்கு மத்தியில் காபுல் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் காணப்பட்ட கர்ப்பிணியொருவர் குழந்தையை பெற்றெடுத்தார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள ரம்ஸ்டெய்ன் விமானதளத்தை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தவேளை அந்த பெண்மணி குழந்தையை பெற்றெடுத்தார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கிய பின்னர் விமானத்திற்குள் சென்ற மருத்துவர்கள் உரிய சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
தாயும் சேயும் நலமாக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் பயணித்துக்கொண்டிருந்தவேளை அந்த பெண் வலியால் துடித்தார்,விமானத்தில் காற்றழுத்தத்தை அதிகரிப்பதற்காக விமானத்தை விமானி கீழே இறக்கவேண்டியிருந்தது இது தாயின் உடல்நிலையை பாதுகாப்பதற்கு உதவியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய...

‘உக்ரைனுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்’

உக்ரைன் உடனான மோதல் கூடிய விரைவில் முடிவுக்கு வரப்பட வேண்டும் எனவும்...

மிட்சல் ஸ்டார்க் T-20 ​போட்டிகளில் இருந்து ஓய்வு

அவுஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச இருபதுக்கு 20 ​கிரிக்கெட்...

சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் 1000 பேர் பலி

மேற்கு சூடானின் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவினால் ஆயிரத்திற்கும்...