Date:

காபுலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் குழந்தையை பெற்றெடுத்த பெண்

காபுலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் ஆப்கான் பெண்ணொருவருக்கு குழந்தை பிறந்தது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நிலவும் குழப்பநிலைக்கு மத்தியில் காபுல் விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் காணப்பட்ட கர்ப்பிணியொருவர் குழந்தையை பெற்றெடுத்தார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனியில் உள்ள ரம்ஸ்டெய்ன் விமானதளத்தை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தவேளை அந்த பெண்மணி குழந்தையை பெற்றெடுத்தார் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானம் தரையிறங்கிய பின்னர் விமானத்திற்குள் சென்ற மருத்துவர்கள் உரிய சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.
தாயும் சேயும் நலமாக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
விமானம் பயணித்துக்கொண்டிருந்தவேளை அந்த பெண் வலியால் துடித்தார்,விமானத்தில் காற்றழுத்தத்தை அதிகரிப்பதற்காக விமானத்தை விமானி கீழே இறக்கவேண்டியிருந்தது இது தாயின் உடல்நிலையை பாதுகாப்பதற்கு உதவியது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பணம் தருகிறீர்களா? இல்லையா? – சபையில் சஜித்

நாடாளுமன்றத்தில் இன்று (24) கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,...

நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம் – தசுன்

நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் 20/20 தொடருக்கு தாம் நன்கு தயாராக இருப்பதாக...

பாடசாலைகளுக்கு விடுமுறை! கல்வி அமைச்சு அறிவிப்பு

இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற...

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு ( விலை பட்டியல் இணைப்பு)

இன்று (24) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான...