Date:

இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டுக்கான ஆடவர் இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் முதலான நாடுகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல், நவம்பர் மாதம் 14 ஆம் திகதிவரை இந்தத் தொடர் இடம்பெறவுள்ளது.

இறுதிப் போட்டி துபாயில் இடம்பெறவுள்ளது.

முதலாம் சுற்றிலுள்ள இலங்கை அணி, நமீபியா அணியுடன், ஒக்டோபர் 18 ஆம் திகதி தமது முதல் போட்டியில் மோதவுள்ளது.

முதலாம் சுற்று ஒக்டோபர் 17ஆம் திகதி முதல் 22 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இந்த சுற்றிலுள்ள இரு குழுக்களிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், 12 அணிகளின் சுற்றுக்கு தகுதிபெறும்.

இரு குழுக்கள் உள்ள 12 அணிகளின் சுற்று, ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல், நவம்பர் 8 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, நவம்பர் 10 ஆம் மற்றும் 11 ஆம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெற்று, 14 ஆம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த...

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக...

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர்...

பாட்டளிக்கு சிஐடி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க...