Date:

காவி நிறம் இந்துக்களுக்கு பச்சை நிறம் முஸ்லீம்களுக்கு சொந்தமானதா?

காவி நிறம் இந்துக்களுக்கு சொந்தமாவையா? பச்சை நிறம் முஸ்லீம்களுக்கு சொந்தமானதாவையா? என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடித்துள்ள ‘பதான்’ திரைப்பட சர்ச்சை குறித்து பேசிய ஜம்மு காஷ்மீர்முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

A file photo of NC president Farooq Abdullah (PTI)

காவி நிறம் இந்துக்களுக்கு சொந்தமானதா? என்று தேசிய மாநாட்டில் தலைவர் பரூக் அப்துல்லா நேற்று வெள்ளிக்கிழமை (23) கேள்வி எழுப்பினார்.

மேலும், கருத்து தெரிவித்த அவர் “ காவிநிறம் இந்துக்களுக்குச் சொந்தமானது, பச்சை முஸ்லீம்களுக்குச் சொந்தமானது என்று அர்த்தமா? இது என்ன? பசு இந்துக்களுக்குச் சொந்தமா, எருது முஸ்லீம்களுடையதா?” மேலும் கேள்வி எழுப்பினர்.

பதான் படத்தில் ‘பேஷாரம் ரங்’ பாடலில் காவி உடைகள் பயன்படுத்தியுள்ளதால் மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கோபமடைந்ததை அடுத்து சர்ச்சை ஏற்பட்டது.

மேலும் குறித்த படத்தில் உள்ள சில காட்கள் படத்திலுருந்து நீக்கவிட்டால் மத்தியப் பிரதேசத்தில் படத்தைத் தடை செய்யப் போவதாக தெரிவித்தார்.

மேலும், வலதுசாரி அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) தீபிகா படுகோனின் காவி உடை மற்றும் பாடலில் உள்ள சில காட்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

குறித்த பாடல் தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்திய குழுவினர், திரைப்பட காட்சி மற்றும் பாடலில் உடனடியாக மாற்றங்கள் கோரினர்.

மேலும் பாடலில் காவி நிறம் பயன்படுத்தியதை தொடர்ந்து மும்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அழிக்கப்பட்டுள்ளது.

மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காவி நிறத்தை வேண்டுமென்றே பயன்படுத்தியதாக தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தீபிகா படுகோன் மீது இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Source – https://www.indiatoday.in/india/story/farooq-abdullah-pathaan-movie-besharam-rang-controversy-saffron-colour-belongs-to-hindus-2312780-2022-12-23

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுகயீன விடுமுறையில் குதித்த மின்சார சபை ஊழியர்கள்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறையை அறிவித்து,...

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறும் பாகிஸ்தான்?

ஆசியக் கிண்ணத்திலிருந்து வெளியேறுவதா என்பது குறித்து இன்று இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளதாக...

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

எதிர்வரும் வியாழக்கிழமை (18) கொழும்பின் பல பகுதிகளில் 9 மணித்தியால நீர்...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...