பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். மஹவத்த இன்று (12) உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.