Date:

தேவை ஏற்படின் நாடு முடக்கப்படும் – அரசு

நாடு முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலுமாக நிராகரிக்கப்படாத நிலையில் தேவை ஏற்படின் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடனான முடக்கம் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகள் குறித்து பரிசீலிக்கப்படுவதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் நாட்டின் நிலைமையை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் வட்டார தகவல்கள் தெரிவித்தன.

கடந்த வெள்ளிக்கிழமை திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகளில் சில கட்டுப்பாடுகளை வலுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்தபோதும் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், நாடு முடக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

அடித்தோடு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (09) பிணையில்...

மின் கட்டண உயர்வு – பொதுமக்கள் கருத்து

2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டிற்கான இலங்கை மின்சார சபையால் (CEB)...

பாராளுமன்றம்,பிரதமர், அமைச்சரின் வீடுகளை போராட்டக்காரர்கள் கொளுத்தினர்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் இரண்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில்,...

நேபாளத்தில் சமூக ஊடகங்களின் மீதான தடை வாபஸ்

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு...