எரிவாயு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஜூலை மாதத்தில் மாத்திரம் இதுவரை 5 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இம்மாத இறுதிக்குள் மேலும் 6 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.