ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்களை அரசாங்கம் வாங்கிவிட்டது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பின்னர் கூட்டணியில் இருந்து அவர்களின் கட்சியை நீக்கிவிட்டோம். இனி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் கூட்டணியும் அமைக்கப்படாது.
தூய அணிகளுடனேயே எமது பயணம் தொடரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.