கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான உபேக்ஷா சுவர்ணமாலி பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
எதிர்காலத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் உபேக்ஷா செலுத்திய கார் மோதி விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த 18 வயது இளைஞர் பேராதெனிய மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.