பொல்கொல்ல நீர்த்தேக்கத் திருத்தப் பணிகள்: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

செப்டம்பர் 25 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி முதல் செப்டம்பர் 27 ஆம் திகதி மாலை 6.00 மணி வரை பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் நீர் முற்றாக வற்றச் செய்யப்படும் என நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர், பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

எல் நினோ (El Niño) காரணமாக இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

நீர்த்தேக்கத்தின் மதகுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இவ்வாறு இரண்டரை நாட்களுக்கு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றப்படவுள்ளதாக அவர் கூறினார்.

இதனால், பொல்கொல்ல மற்றும் பாலகொல்ல ஆகிய பகுதிகளிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பொதுமக்கள், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீரை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More like this

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல்...

சீ.வீ.கே.சிவஞானம், சுமந்திரன் உட்பட 5 தரப்பினருக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும்...