எதிர்வரும் புதன் கிழமைக்கு பிறகு மாகாணங்களுக்கு இடையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இயக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கங்கவட கோரலை பிரதேசத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தென்னக்கும்புர வித்யாலோக வித்தியாலயத்தில் ஸ்புட்னிக் வீ தடுப்பூசி வழங்கும் நிகழ்வில் கண்காணிப்பை மேற்கொள்ளும் பொழுது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி நிகழ்வு நான்கு நாட்கள் இடம்பெறும் என்றும் கண்டி மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும், எதிர்வரும் நாட்களில் பத்து லட்சம் தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு வரவிருப்பதாகவும் இதேவேளை தற்போது ஆசிரியர்கள் ஒன்லைன் மூலமாக கல்வி நடவடிக்கைகள் புறக்கணிப்பின் ஈடுபட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும் ஆசிரியர்கள் அரசியலை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.