ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் வடக்கு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
பொல்கஹவெலயிலிருந்து மஹவ நோக்கி பயணித்த ரயிலே பொதுஹெர ரயில் நிலையத்தில் வைத்து இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்டுள்ள தடங்கல் நிமித்தம், பொதுஹெர ரயில் நிலையத்தைக் கடந்து பயணிக்க வேண்டிய அனைத்து ரயில்களும் தாமதமாகவே பயணிக்கும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


