ஊடகவியலாளர் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இலங்கைக்கு எதிராக ஜெனீவா கூட்டத் தொடரில் பேசக்கூடிய சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது என சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் சர்வதேசத்தின் மத்தியில் இலங்கை மீது பாரதூரமான நிலைப்பாடுகள் தோன்ற ஏதுவாக அமையும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில், இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள், இலங்கை தொடர்பாக நிலைப்பாடு எடுக்கும்போது பாரதூரமானதாக அமையக் கூடும் என்றும் மேலும் அவர் வலியுறுத்தினார்.