யாழ்ப்பாணத்திற்கு கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் அவரது 75 பேர் கொண்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது யாழ். மாநகர சபைக்கு சமூகமளித்த நிலையில் மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் சபைக்கு வருகை தராத நிலையில் பிரதி மேயர் துரைராஜா ஈசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது கொழும்பு பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால் மற்றும் யாழ். பிரதி மேயர் துரைராஜா ஈசன் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.