யாழ் மாவட்ட மதத் தலைவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி கையொப்ப போராட்டத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
நல்லை திருஞான சம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சார்ய சுவாமிகள்,கத்தோலிக்க திருச்சபையின் யாழ் பேராயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் அதிவணக்கத்தி்ற்குரிய கலாநிதி டானியல் தியாகராஜா ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட ஜமியத்துல் உலமா தலைவர் அல்-ஹாஜ் அப்துல் அஸீஸ் ஆகியோர்கள் கையொப்பமிட்டுள்ளார்.