எரிவாயு விலை தீர்மானம் தொர்பான அமைச்சரவை உபகுழுவில் உறுப்பினர் பதவியை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலஇராஜினாமா செய்துள்ளார்.
அண்மையில் எரிபொருள் விலை தொடர்பில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த குழுவில் பங்கேற்றால் அரச தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டும் என கருதியே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீர்மானம் ஆளும் கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொது ஜன முன்னணியின் தேசிய அமைப்பர் பெசில் ராஜபக்ஸ அமைச்சராக பதவி ஏற்கவுள்ளார் என்ற செய்தி வௌிவந்த நிலையில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.