நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் படி இன்று(22) காலை 06 முதல் கொழும்பில் கொலன்னாவ பொலிஸ் பிரிவில் சேரபுர கிராம சேவகர் பிரிவும், இரத்னபுரி மாவட்டத்தில் கொடகவெல பொலிஸ் பிரிவில் கொட்டவல கிராம சேவகர் பிரிவும் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் மஹாபாகே பொலிஸ் பிரிவில் கெரனகபொகுன கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்படுகிறது.